பயங்கரவாத வைரசை அழிக்க வேண்டும் ; வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
பயங்கரவாத வைரசை அழிக்க வேண்டும் ; வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

பயங்கரவாத வைரசை அழிக்க வேண்டும் ; வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி : ''கொரோனா வைரசுடன், அண்டை நாடு துாண்டி விடும் பயங்கரவாத வைரசையும் அழிக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி, வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து, அவர், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடு விடுதலை பெற்றது முதல், முஸ்லிம்கள் உட்பட அனைத்து

புதுடில்லி : ''கொரோனா வைரசுடன், அண்டை நாடு துாண்டி விடும் பயங்கரவாத வைரசையும் அழிக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி, வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.



latest tamil news


இது குறித்து, அவர், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடு விடுதலை பெற்றது முதல், முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரின் நலன் காத்து, உண்மையான மதச்சார்பற்ற நாடாக, இந்தியா திகழ்கிறது.ஆனால் அண்டை நாடு, நம் எல்லைக்குள் பயங்கரவாதிகளை அனுப்புகிறது. அத்துடன் சமூக வலைதளங்கள் மூலம், குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக, பொய் பிரசாரம் செய்கிறது.



latest tamil news


இங்குள்ள சிறு கூட்டமும், பொய் பிரசாரம் மூலம், இந்தியா குறித்த தவறான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இத்தகைய முயற்சிகளை, கடுமையாக கண்டிக்க வேண்டும். கொரோனாவால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கின்றனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றனர். அதை ஏற்க முடியாது.சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வை துாண்டும் பேச்சு, பொய் பிரசாரம், தவறான தகவல் ஆகியவற்றை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. கொரோனா வைரஸ் போல, அண்டை நாட்டின் பயங்கரவாத செயல்களையும் அழிக்க வேண்டும். பயங்கரவாத எதிர்ப்பில், உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (7)

Krishna - bangalore,இந்தியா
07-மே-202011:54:05 IST Report Abuse
Krishna Murderers Must Also be Punished
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
07-மே-202010:45:01 IST Report Abuse
Raja தமிழ்நாட்டில் அழிக்க வேண்டிய வைரஸ்கள் நிறைய இருக்கின்றன. தீமுக சாமான் குருமா, டேனியல் கீரமணி உண்டியல் குலுக்கி போன்றவற்றை ஒழித்தால்தான் தமிழகம் வளம் பெறும்.
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
07-மே-202010:27:24 IST Report Abuse
Mirthika Sathiamoorthi இந்த வைரஸை ஒழிக்க மக்களே அடுத்த ஊரடங்குதான் ஒரே வழி..எல்லோரும் கைத்தட்டவும் விளக்கு ஏத்தவும் தயாராகுங்கள்....நிவாரணம் மட்டும் மூச்... பசியோட இருந்த என்ன கொறஞ்சுபோச்சு? வைரஸ் செத்ததா இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X