ராசிபுரம்: கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த, 5ம் தேதி முதல், நாமக்கல் மாவட்டத்தில் இத்தளர்வுகள் அமல் படுத்தப்பட்டன. அன்று முதல், ராசிபுரத்தில் பகல் நேரத்தில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகம் கூடுகிறது. விதிவிலக்கு அளிக்கப்படாத கடைகளான கவரிங், ஜவுளி, பேன்சி உள்ளிட்ட பல்வேறு கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், ராசிபுரம் அனைத்து பகுதியிலும், கட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். பொதுப் போக்குவரத்து வாகனங்கள் தவிர, மற்ற அனைத்து வாகனங்களும் செல்கின்றன. இதனால், வீட்டில் இருக்கும் பொதுமக்கள் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வர அச்சப்படுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE