எலச்சிபாளையம்: இலுப்பிலியில், சேதமாகியுள்ள பாலத்தை சீரமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்பிலி கிராமத்தில், 20 வருடங்களுக்கு முன், அத்தாயிஅம்மன் கோவில் அருகே, திருமணிமுத்தாற்றில் பாலம் கட்டப்பட்டது. தற்போது, பாலம் சிதிலமடைந்து, பக்கவாட்டில் உள்ள தடுப்புச்சுவர்கள் ஆங்காங்கே இடிந்துள்ளன. வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தவறிஆற்றுக்குள் விழ வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், பாலத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE