ராசிபுரம்: ராசிபுரத்தில் இருந்து, சேந்தமங்கலம் செல்லும் வழியில் நிழற்கூடம் இல்லாததால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ராசிபுரத்தில் இருந்து, சேந்தமங்கலம் வழியாக நாமக்கல் செல்லும் பகுதியில், பெரும்பாலும் கிராமங்கள்தான் அதிகம் உள்ளன. ஆனால், இப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நிழற்கூடங்கள் பாதிக்கு மேல் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மீதி உள்ளவற்றில் இருக்கை வசதிகள் இல்லை. இதனால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பஸ்சுக்கு காத்திருக்கும்போது, வெயிலிலும், மழையிலும் நனைய வேண்டியுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் பொருட்களை கொண்டு செல்ல, பஸ்களுக்கு காத்திருக்க கோடைகாலத்தில் நிச்சயம் நிழற்கூடம் வேண்டும். எனவே, இப்பகுதிகளில் உள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE