சென்னை: சூதாட அனுமதிகேட்டு நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு என மக்கள் நீதி மையை கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பொது முடக்கம் நீக்கும் வரையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆன்லைனில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:

குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம்
தமிழக அரசு.
எங்கும் வருவோம் உமைத் தடுக்க.
மக்கள் நீதியே வெல்லும்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 9, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE