புதுடில்லி : கொரோனா தாக்கம் காரணமாக டில்லியில் புதிதாக 224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி, பாதிப்புகளையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு சற்று கூடுதலாக உள்ளது. தலைநகர் டில்லியில் நேற்று (மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 வரை) புதிதாக 224 பேருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,542 ஆக அதிகரித்தது. இதுவரை கொரோனா பாதிப்பல் இருந்து 2020 பேர் குணமடைந்துள்ளனர். 4,454 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 2 பேர் பலியாகினர். மொத்த பலியானோரின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE