குளித்தலை: மும்பையில் இருந்து வந்த, ஒன்பது பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. மும்பையில், வேளாண்மை பயிற்சி மற்றும் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்த, கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த ஏழு மாணவியர், இரண்டு தொழிலாளர்கள் தனி ரயில் மூலம் திருச்சி வந்தனர். கரூர் மாவட்ட நிர்வாகம் மூலம், தனி பஸ்ஸில் ஏற்றி வரப்பட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில், தாசில்தார் ரத்தினவேலு, வட்டார மருத்துவ அதிகாரி சிவக்குமார் தலைமையில், அவர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒன்பது பேருடைய விலாசம் பதிவு செய்யப்பட்டது. நகராட்சி ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் அமீர்தீன் தலைமையில், மருத்துவ குழுவினர் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE