கரூர்: அமராவதி ஆற்று பாலத்தின், பிளாட்பாரத்தில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரி செய்ய வேண்டும். கரூர்- திருச்சி சாலையில், லைட்ஹவுஸ் கார்னர் அமராவதி ஆற்றின் குறுக்கே, உயர் மட்டபாலம் கட்டப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் நடந்து செல்ல, இரண்டு பக்கமும் பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பிளாட்பாரத்தில், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பாலத்தில் செல்லும் வாகனங்கள் அதிர்வால், சிமென்ட் கலவையும் உதிர்ந்து வருகிறது. இதனால், அமராவதி ஆற்றுப்பாலத்தின், பிளாட்பாரத்தில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரி செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE