கரூர்: சிதிலமடைந்துள்ள குடிநீர் தொட்டிகளை, பராமரிப்பு செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மதுரை நெடுஞ்சாலைகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பிளாஸ்டிக் தொட்டி மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டு வந்தது. இதை பலர் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில், பிளாஸ்டிக் தொட்டிகள் பழுதடைந்து விட்டன. இதை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன் வரவில்லை. இந்நிலையில், கோடைக்காலம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளை மாற்றி விட்டு, புதிய குடிநீர் தொட்டி வைத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE