குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பாதையை மறைக்கும் முட்செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகர் வாய்க்கால் அருகே, பாதையை மறைக்கும் வகையில் சாலையோரம் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகளுக்கு காயங்கள் ஏற்படுவதும், முட்செடிகள் மீது மோதாமல் இருக்க சாலையின் மறுபக்கம் செல்லும் போது, எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதியும் விபத்து நடந்து வருகிறது. நாளாக, நாளாக அடர்ந்து வளர்ந்து வருவதால் சில நாட்களில் சாலையை மறைக்கும் விதமாக முட்செடிகள் வளரும் என்பதால், உடனே அகற்ற இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE