கூடலுார்:கூடலுார் பகுதியில், பால்மேடு, பாண்டியார் டான்டீ, மரப்பாலம், அட்டிகொல்லி, சீனகொல்லி, புளியாம்பாறை கிராமங்களில், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மக்கள் கூறுகையில், 'யானைகள் நடமாட்டம் உள்ள இப்பகுதிகளில், மழையின் போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் சிரமம் ஏற்படுகிறது' என்றனர்.மின்துறையினர் கூறுகையில், 'மழையின் போது, பாலமேடு பகுதியில் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்தால், இரவில் மின் கம்பிகளை சீரமைக்க முடியாமல் ஊழியர்கள் திரும்பி வந்தனர். தற்போது, மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டு மின்சப்ளை வழங்கப்பட்டது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE