தேனி,:தேனி அல்லிநகரம் நகராட்சியில் நேற்று ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது. இதனால் ஓட்டல்கள், டீ கடைகளில் அதிகம் மக்கள் கூடினர்.
இதனை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் தேனி போலீஸ் ஸ்டேஷனில் முத்துராஜ் டி.எஸ்.பி., தலைமையில் நடந்தது. இதில் ஓட்டல், டீ கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். கொரோனா தடுப்புக்காக நாளை முதல் மே 17 வரை டீ கடை, ஓட்டல்கள் தேனி நகரில் செயல்பட வேண்டாம் என்று முடிவு செய்துஉள்ளோம், என, சங்கத்தலைவர் கண்ணதாசன், செயலாளர் பொன்முருகன் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE