புதுடில்லி: 'பொதுத் துறை வங்கிகள் மூலம், கடந்த இரண்டு மாதத்தில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:கடந்த மார்ச், 1ம் தேதி முதல், மே, 8ம் தேதி வரை மட்டும், பொதுத் துறை வங்கிகள் மூலம், 5.95 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், சில்லரை வர்த்தகம், விவசாயம், கனரக நிறுவனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த, 46.74 லட்சம் கணக்குகளுக்கு, பொதுத் துறை வங்கிகள், 5.95 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகளிடமிருந்து, 1.18 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளன.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE