பொள்ளாச்சி:நெகமம் அடுத்த, ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் சிறப்பு பயிற்சி அளித்து, பொதுத்தேர்வுக்கு, ஆசிரியர்கள் தயார் படுத்தி வருகின்றனர்.நெகமம் அடுத்த ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும், கடந்த, ஒன்பது ஆண்டுகளாக நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு சிறப்பு சேர்த்து வருகின்றனர். நடப்பாண்டு பொதுத்தேர்விலும், 'ஆல் பாஸ்' தொடர, பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி மற்றும் ஐந்து பாடப்பிரிவுகளின் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.ஊரடங்கு காரணமாக, பள்ளிக்கு மாணவர்களை வரவழைக்காமல், 'வாட்ஸ் ஆப்' மூலமாக, கேள்விகள் கேட்டு, தேர்வு நடத்தி வருகின்றனர். ஆசியிர்களின் முயற்சிக்கு பெற்றோரும் உதவுகின்றனர். ஆசிரிர்கள் கடந்த ஒரு மாதமாக சிறப்பு பயிற்சி அளித்த நிலையில், ஜூன் 1ம் தேதி பொதுத்தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு, மாணவர்களை தயார்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE