நாமக்கல்: தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, நேற்று, தமிழகம் முழுவதும் ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை, 'பேட்ஜ்' அணிந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோல், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை, 'பேட்ஜ்' அணிந்து, ஒப்பந்த செவிலியர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கீதா மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE