திண்டிவனம்: திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க., சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ரஷீத்கான் ஏற்பாட்டின் பேரில் திண்டிவனம் 29வது வார்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட செயலர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 200 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., சீத்தாபதி சொக்கலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், இலக்கிய அணி சின்னசாமி, மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளர் சரவணன், வழக்கறிஞர் பாபு, சின்ன ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் கோபிநாத், சின்னதுரை, நகர துணைச் செயலர் அசோக்குமார், நகர இளைஞரணி ஷாகித், ஜெரோம் ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE