உளுந்துார்பேட்டை; திருநாவலுார் அருகே பணம் பிரச்னையில் இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட மோதலில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர்.திருநாவலுார் அருகே நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 30; இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அய்யனார் வீட்டில் இருந்தபோது, தேவநாதன், இவரது சகோதரர் மணிகண்டன், தந்தை நாராயணன், தாய் லட்சுமி ஆகியோர் சேர்ந்து அய்யனாரை ஆபாசமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், திருநாவலுார் போலீசார் 8 பேர் மீது வழக்குப் பதிந்து, அய்யனார், மணிகண்டன், 32; ஆகியோரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE