உளுந்துார்பேட்டை; திருநாவலுார் அருகே லோடு லாரி கவிழ்ந்த விபத்தில், குளியல் சோப்புகளை திருடிச் சென்றவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம், மணியாரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 56; இவர், கடந்த 11ம் தேதி புதுச்சேரி மாநிலம், வடமங்கலம் பகுதியில் உள்ள குளியல் சோப்பு தொழிற்சாலையில் இருந்து 16 டன் சோப்புகளை ஏற்றிக் கொண்டு சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.திருநாவலுார் அருகே செங்குறிச்சியில் லாரி வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது. இதில், வெளியே சிதறிய ஒரு லட்சத்து 800 ரூபாய் மதிப்புள்ள 4 டன் சோப்புகளை பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றனர்.இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து சோப்புகளை அள்ளி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE