விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் மேல்பாதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை செயற் பொறியாளர் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் மதுரா மேல்பாதி கிராமத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து 9.57 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக அங்கன்வாடி கட்டடம் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. புதிய கட்டடத்தை, மாவட்ட செயற்பொறியாளர் ராஜா பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனைவழங்கினார்.பி.டி.ஓ.,க்கள் எழிலரசு, நந்தகோபாலகிருஷ்ணன், சிறு, குறு தொழில் சங்க மாவட்ட தலைவர் கருணாநிதி, ஊராட்சி செயலர் புத்தன், அலுவலக உதவியாளர் வெங்கடேசன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE