விழுப்புரம்: கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வியாபாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் பலசரக்கு கடைகளுக்கு அனுமதி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.இதில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடைகளில் தனி நபர் இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வியாபாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.அப்போது, எஸ்.பி., ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், ஏ.டி.எஸ்.பி., சரவணக்குமார் மற்றும் வியாபார சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE