தொண்டி:தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்கப் பட்டனர். சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
தொண்டி அருகே நம்புதாளையில் இருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள்துரிதமாக நடக்கிறது. தொண்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர்மட்டும் பணியாற்றினார். தற்போதுகூடுதலாக 4 டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் சுகாதார செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கிருமி நாசினி மருந்து உள்ளிட்டநோய் தடுப்பு மருந்துகள் போதுமான அளவில்இருப்பு உள்ளது, என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE