திருப்பூர்:'பத்தாம் வகுப்பு தேர்வுத்தேதியை மாற்ற வேண்டும்' என்று ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு(ஐபெட்டோ) தேசிய செயலாளர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:மாணவர்கள் 'கொரோனா' அச்சத்துடன், இரண்டு மாத காலம், பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்ததால், தேர்வு எழுதும் பயிற்சி இல்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் முதல் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE