கோவை:ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் படிக்கும் இவர்களின் குழந்தைகள் இதனால் தவிக்கின்றனர். இதையறியும் பள்ளி ஆசிரியர்கள், உணவுப்பொருட்கள் வழங்கி உதவி வருகின்றனர்.வெள்ளக்கிணறு வி.சி.வி., அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில், நிவாரண உதவியாக, தலா, 650 ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை, 150 மாணவர்களின் குடும்பங்களுக்கு நேற்று வழங்கினர்.நிகழ்ச்சியில், எஸ்.எஸ்., குளம் மாவட்ட கல்வி அலுவலர் கீதா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியை பரிமளா, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE