சூலுார்:வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து, சூலுாருக்கு வந்த, 245 பேரை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.ஊரடங்கில் தளர்வு களை அரசு அறிவித்ததால், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் தவித்த பலர், சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதனால், மாவட்ட எல்லைகளில் உள்ள, செக்போஸ்ட்களில், போலீசார், சுகாதாரத்துறை, வருவாய்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சூலுார் வட்டாரத்தில் உள்ள மூன்று செக்போஸ்ட்களில், பரிசோதனை நடத்தப்படுகிறது.சூலுார் வட்டார மருத்துவ அலுவலர் உமர் பரூக் கூறுகையில், "வெளிமாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து இதுவரை, 245 பேர் சூலுார் வந்துள்ளனர். அனைவரும் பரிசோதிக்கப்பட்டு, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதார ஊழியர்கள் தினமும் அவர்களை கண்காணித்து வருகின்றனர்," என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE