மதுரை,மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆன்லைன் வழி செயற்குழு கூட்டம் நடந்தது.அறநிலையத்துறைக்கு கீழ் இயங்கும் கோயில்களில் கொரோனா கட்டுப்பாடுடன் கூடிய தரிசனம் ஏற்பாடு செய்ய வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலத்தில் மக்களுக்காக சேவை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், பத்திரிகை துறையினர், சுகாதார பணியாளர்கள், சேவா பாரதி உள்ளிட்ட அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.மாவட்ட தலைவர் மாரிச்செல்வம், செயலாளர் பத்மநாபன், மாநில அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணா, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE