கூடலுார்:முதுமலையை சேர்ந்தவர் பெருமாள், 48. கார்குடி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் உட்பட, ஐந்து வன ஊழியர்கள் கார்குடி வனச்சரகம் ஒம்பட்டா வனப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். திடீரென அவ்வழியாக வந்த கரடி, பெருமாளின் வலது கையை கடித்துள்ளது. உடன் சென்றவர்கள் சப்தமிட்டு கரடியை விரட்டி, அவரை காப்பாற்றி உள்ளனர். காயமடைந்த அவர், கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE