வேடசந்துார்:''கொரோனோ தொற்றில் இருந்து தமிழகத்தை முதல்வர் காக்க வேண்டும்'' என, காங்., எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார்.வேடசந்துாரில் அவர் கூறியதாவது:
வெளி மாநிலங்களில் அதிகளவில் உள்ள கரூர் பகுதியினரை மீட்டு வர தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.ஏழை மக்களின் பஸ் கட்டணத்தை காங்., ஏற்கும் என தலைவர் சோனியா தெரிவித்தார். அதன்படி தமிழக அரசுக்கு காங்., ஒரு கோடி கொடுக்க தயாராக இருந்தது. ஆனால் அந்த பணத்தை ஏற்க மறுப்பதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் நிதி இல்லை என புலம்பிக் கொண்டே, மற்றொரு பக்கம் அரசியல் செய்வதை கைவிட்டு, மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்றி தமிழ்நாட்டை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE