உடுமலை:உடுமலை, கிராம ஊராட்சிகளில், துாய்மைப்பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணி செய்வதை, ஊராட்சி நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, ஊராட்சிகளில், தொடர்ந்து, கிருமி நாசினிகள் தெளிப்பதும், குப்பைக்கழிவுகள் இல்லாமல், சுற்றுப்புற துாய்மையை ஏற்படுத்தவும், பணிகள் நடக்கிறது. துாய்மைப்பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிநேரத்தை விடவும், கூடுதலாக இப்பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக அனைவருமே முகக்கவசம் அணிந்து வருவதற்கும், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும், அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.இந்நிலையில் துாய்மைப்பணியாளர்கள் இந்த விழிப்புணர்வு இல்லாமல், பணிகளை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சுற்றுப்பகுதி கிராமங்களில் இவ்வாறு, பணியாளர்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல், பணி செய்கின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நோய்த்தடுப்பு நடவடிக்கையாகவும், முகக்கவசங்கள் மற்றும் கையுறை அணிவது குறித்தும், ஊராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE