குமாரபாளையம்: குமாரபாளையத்தில், பள்ளி மாணவியை கடத்தியதாக, போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார். குமாரபாளையம், வட்டமலையை சேர்ந்தவர் சண்முகம், 32. விசைத்தறி கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவியை, மார்ச், 16ல் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். நேற்றுமுன்தினம் மாலை, காவிரி பாலம் வழியாக இருவரும், குமாரபாளையம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தபோது போலீசாரால் பிடிபட்டனர். மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். போக்சோ சட்டத்தில், சண்முகம் கைது செய்யப்பட்டார். சண்முகத்திற்கு, மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE