அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், வெளியூரில் இருந்து நபர்களை தனிமைப்படுத்த, மையம் அமைக்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வெளிமாநிலங்களில் இருந்து அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிக்கு வரும் நபர்களை கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்த, அரவக்குறிச்சி அம்மன் நகரில் உள்ள சமுதாய கூடத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர். இதையடுத்து கட்டடத்தை துப்புரவு செய்யும் பணிதுவங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மாலை, அப்பகுதி மக்கள், 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். சமுதாய கூடத்திற்கு செல்லும் வழியில், தடைகளை ஏற்படுத்தினர். மேலும், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அரவக்குறிச்சி போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE