ஜெனிவா: கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும் என ஐ.நா., சபை கணித்துள்ளது.

1930ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய வீழ்ச்சியாக இது இருக்கும் என்பதுடன் சுமார் 3.5 கோடி பேர் வறுமையால் வாடுவார்கள் என ஐ.நா., எச்சரித்துள்ளது. இவர்கள் பெரும்பான்மையினர் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனாவால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச பொருளாதாரம் 8.5 லட்சம் கோடி டாலர் என்ற அளவுக்கு இழப்பை சந்திக்கும். இது கடந்த 4 ஆண்டுகளில் பெற்ற அனைத்து வளர்ச்சிக்கும் ஈடானது என ஐ.நா., கவலை தெரிவித்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தபை் பொருத்தவரை 2020ம் ஆண்டில் எதிர்பாக்கப்பட்ட வளர்ச்சியில் 1.2 சதவீதம் வீழ்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE