மெக்சிகோ: மெக்சிகோ புறநகர்ப்பகுதியில் கூண்டிலிருந்து தப்பி சாலைக்கு வந்த புலியை மூவர் விரட்டி பிடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெக்சிகோவின் சலிஸ்கோ என்ற இடத்தில் சாலையோரம் நடைமேடையில் சென்று கொண்டிருந்த புலியை மூவர் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் ஒருவர் இரும்புசேர் கொண்டு புலியை தடுக்க முயன்றார். புலி சாலைக்கு செல்லாமல் மற்றொருவர் காரில் சென்று மறைக்க கவ்பாய் தொப்பி அணிந்திருந்த மற்றொரு நபர் புலியை லாவகமாக கயிறு வீசி பிடித்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மொத்தம் 23 விநாடிகள் ஓடிய வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE