விழுப்புரம்: காணை வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், 500 குடும்பங்களுக்கு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, நிவாரண உதவிகளை வழங்கினார்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், 'ஒருங்கிணைவோம் வா' திட்டத்தின்படி, கொரோனா பாதிப்பு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. காணை அடுத்த சாலவனுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத் தலைவர் புகழேந்தி, துணைச் செயலர் ஜெயச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலர் ராஜா முன்னிலை வகித்தனர்.வடக்கு மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் பொன்முடி, 500 நாவிதர் மற்றும் சலவைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்கினார். ஏற்பாடுகளை வடக்கு ஒன்றிய செயலர் முருகன் செய்திருந்தார்.ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கார்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ், அன்பு, கிளைச் செயலாளர்கள் அகிலன், மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE