கண்டாச்சிபுரம்; முகையூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடந்தது.முகாமிற்கு, வட்டார மருத்துவர் சுகுமாறன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் ஷாஷித், சுரேந்திரன் முன்னிலை வகித்தனர். முகாமை ரத்தவங்கி மருத்துவ அலுவலர்கள்சாந்தி, ராஜ மகேந்திரன் கண்காணித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன் மேற்பார்வையில் வீரபாண்டி ஊராட்சியைச் சேர்ந்தஇளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 32 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர்.முகாமில் ரத்ததான கொடையாளர்களுக்கு நகைக்கடை உரிமையாளர் நடராஜன் ஹார்லிக்ஸ், குளிர்பானம் மற்றும் பரிசு வழங்கினார். பின்னர் கொடையாளர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.முகாமில், மருந்தாளுனர்சத்தியமூர்த்தி, கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர். சுகாதார, ஆய்வாளர் கதிரவன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE