மதுரை, மதுரை மாவட்டத்தில் இதுவரை 148 பேரை கொரோனா தாக்கியுள்ளது. நேற்று காலை வரை 92 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தனர். மாலையில் தலா 8 ஆண், பெண், இரு குழந்தைகள் உட்பட 18 பேர் ஒரே நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆயினர்.
இதில் 12 பேர் நகர் பகுதியினர்; 6 பேர் புறநகர் பகுதியினர். இருவாரம் வீட்டு தனிமையை கடைபிடிக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
மாவட்டத்தில் கொரோனாவிடம் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 110ஐ தொட்டது. இருவர் பலியாகியுள்ளனர். இன்னும் 36 பேர் குணமடைய வேண்டியுள்ளது. இது மதுரை மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE