எஸ்.ஐ., மீது தாக்குதல்
மதுரை, செல்லுார் எஸ்.ஐ., தியாகப்ரியன். நேற்றிரவு கணேசபுரம் பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது அவருக்கும், தி.மு.க., 9வது வார்டு இளைஞரணி செயலாளர் சந்துருக்கும் 35, வாய்த்தகராறு ஏற்பட்டு, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். தியாகப்ரியன் காயம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சந்துருவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.கோஷ்டி மோதல்
மதுரை,கருப்பாயூரணி அருகே பூலாங்குளத்தில் இடப்பிரச்னை தொடர்பாக நேற்றிரவு இரு சமூகத்தினர் மோதிக்கொண்டதில் சிலருக்கு மண்டை உடைந்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். போலீசார்
விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE