உளுந்துார்பேட்டை; எலவனாசூர்கோட்டை அருகே நுாறு நாள் திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.எலவனாசூர்கோட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலுவன் மனைவி பச்சையம்மாள், 51; இவர், நேற்று சித்தேரி கிராமத்தில் நடைபெறும் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்தார். காலை 11:30 மணிக்கு திடீரென மயங்கி விழுந்தார்.உடன் அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்ததை உறுதிப்படுத்தினர்.இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE