மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கொரோனா பாதிப்பு பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.மூங்கில்துறைபட்டடு அடுத்த சவரியார்பாளையத்தில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 12 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததையடுத்து நேற்று கலெக்டர் கிரண் குராலா நேரில் சென்று அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அய்வின்போது அப்பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், இப்பகுதியில் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்கவும் ஊராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார்.தொடர்ந்து சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டு, வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, தொற்று உள்ளதா, இல்லையா என கண்டறிய வேண்டும் என சுகாதாரத் துறை மற்றும் போலீசாரிடம் அறிவுறுத்தினார்.திட்ட இயக்குநர் மகேந்திரன், தாசில்தார் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணசாமி, அண்ணாதுரை, மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், திருக்கோவிலுார் மகளிர் ஆய்வாளர் சுமதி, சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE