கள்ளக்குறிச்சி;கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆண்கள் நடுநிலைப் பள்ளி கட்டடம் கூடுதல் பிரசவ வார்டாக மாற்றப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டு இயங்கி வருகிறது. மேலும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், அந்தந்த பகுதிக்குட்பட்ட கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர பரிசோதனைக்காகவும், பிரசவத்திற்காகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் கொரோனா தொற்று அச்சத்தினால், கடந்த சில வாரங்களாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், கர்ப்பிணி பெண்கள் பலர் பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.பிரசவத்திற்காக வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மகப்பேறு வார்டில் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி கூடுதல் இடம் தேவைப்பட்டதால், மருத்துவமனைக்கு முன்பு உள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளி கட்டடம் தற்காலிக பிரசவ வார்டாக மாற்றப்பட்டு, நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE