கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மது குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி பாரதி நகரைச் சேர்ந்தவர் துரை மகன் சுரேஷ், 29; லேத் பட்டறையில் பணிபுரிந்து வந்தார். குடி பழக்கம் உடையவர். குடியில் இருந்து மீள, இவரது தாய் ஜெயலட்சுமி, மாற்று மருந்து வாங்கிக்கொடுத்து வந்துள்ளார்.இதனால் சில நாட்களாக குடிப்பழக்கத்தை மறந்திருந்த சுரேஷ் நேற்று முன்தினம் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை ஜெயலட்சுமி கண்டித்தார்.இதனால், மனமுடைந்த சுரேஷ் நள்ளிரவு அறைக்குள் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE