வேலூர்: காட்பாடி அருகே, மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருமணியை சேர்ந்தவர், குமார், 25, விவசாயி; இவர், தன் நிலத்துக்கு தேவையான மொரம்பு மண்ணை கழிஞ்சூர் ஏரியில் இருந்து மாட்டு வண்டியில் எடுத்துக்கொண்டு ஜாப்பராபேட்டைக்கு நேற்று வந்து கொண்டிருந்தார். அப்போது மாட்டு வண்டி லோடு தாங்காமல் நிலைதடுமாறியதில், குமார் கீழே விழுந்தார். அதில், மாட்டு வண்டி சக்கரம் அவர் மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE