கோவை: கோவையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

கோவையில் இன்று( மே 17) மதியம் 2.30 மணியளவில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றும் பலமாக வீசியது. இதனால், வடகோவை மேம்பாலத்தில் ஒரு மின்கம்பம், டாடாபாத் பகுதியில் 4 மரங்கள், சுந்தராபுரம் எல்ஐசி அருகே 3 மரங்கள், கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதியில் சிக்னல் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதே போல் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனையறிந்த ஊழியர்கள் அதனை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE