விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.விருத்தாசலம் அடுத்த வயலுார் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்வக்குமார், 24. இவரது மனைவி ஷாலினி, 23. இவருக்கும் திமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், விருத்தாசலம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற செல்வக்குமார், திரும்பி வந்து பார்க்கையில் மனைவியை காணவில்லை. இதுகுறித்து செல்வக்குமார் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ஷாலினியை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE