மதுரை:மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பாதித்தோர் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்தது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் கருங்காலக்குடியை சேர்ந்த 19 வயது வாலிபர், கரிசல்குளம் திருமலைநகரை சேர்ந்த 60 வயது முதியவர், வாடிப்பட்டி சேந்தமங்கலம் வடக்குதெருவை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆகியோர் வெளிமாநிலங்களில் இருந்து மதுரை திரும்பியவர்கள். தனிமைப்படுத்துதல் மையத்தில் தங்க வைக்கப்பட்ட இவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா உறுதியானது. ஒருவர் பெங்களூருவில் இருந்தும், இருவர் மும்பையில் இருந்தும் வந்தவர்கள்.

மதுரை விளாங்குடி வருமான வரி காலனியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டார். அவரிடம் தொடர்பில் இருந்த 53, 55 வயது பெண்கள் இருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவனியாபுரத்தை சேர்ந்த 31 வயது கர்ப்பிணி, கருங்காலக்குடி நெல்லுக்குண்டப்பட்டியில் 20 வயது பெண், செல்லுார் கருப்பாயி காம்பவுண்டில் 24 வயது, வண்டியூரில் 36 வயது, பேரையூரில் 23 வயது, சொக்கலிங்கபுரத்தில் 48 வயது, எழுமலையில் 22 வயது ஆண்கள், மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த 21 வயது சுகாதார பணியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள்.
அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருவர் டிஸ்சார்ஜ் ஆனார். இதுவரை 161 பேரை கொரோனா தாக்கியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE