குன்னுார்:குன்னுார் ரேலியா அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளுக்கு, ரேலியா அணை, பந்துமை, ஹைபீல்டு, ஜிம்கானா உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால், 12 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதில், 43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணையில், 38 அடி அளவில் தண்ணீர் இருப்பு உயர்ந்துள்ளது.தற்போது, 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து குழாய் உடைந்து, குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுத்து, 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE