கோவை : கோவையில், சூறாவளி காற்று மற்றும் கனமழையால், மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.கோவை நகரின் பல பகுதிகளில், நேற்று மதியம், 2:30 மணிக்கு, சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்தது.
இதனால், பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. டவுன்ஹால் பகுதியில், சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது. மரங்கள் சாய்ந்ததால், பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. டாடாபாத் பகுதியில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், கார் நொறுங்கியது. ரோட்டில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் விரைந்து அகற்றினர். போலீசார், வருவாய் துறையினர் மாநகராட்சி, மின்வாரிய அதிகாரிகளும் சீரமைப்பு பணிகளில், ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE