செஞ்சி; தாதங்குப்பம் கிராமத்தில் நாடக கலைஞர்களுக்கு தே.மு.தி.க., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.தே.மு.தி.க., மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி ஏற்பாட்டில், 40 நாடக கலைஞர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி மற்றும் பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி தாதங்குப்பம் கிராமத்தில் நடந்தது.விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வெங்கடேசன் தலைமை தாங்கி உதவி பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்குவதை துவக்கி வைத்தார்.மாவட்ட பொருளாளர் தயாநிதி முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் முனுசாமி, இளைஞரணி துணை செயலாளர் கன்னியப்பன், கிளை செயலாளர் கனகசபை, ஊராட்சி துணை செயலாளர் வெங்கடேசன், தாதங் குப்பம் கிளை நிர்வாகிகள் சங்கர் வெங்கடேஷ், கன்னியப்பன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE