விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த திருப்பச்சாவடிமேட்டில் ஜி.ஏ., கல்வி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ வித்யோதயா கல்வியியல் கல்லுாரி, வித்யோதயா மழலையர் மற்றும் ஆரம்பப்பள்ளி நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கி, கிராம மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். ஜி.ஏ., அறக்கட்டளை தலைவர் தியாகராஜன், செயலாளர் ஜெயச்சந்திரன், டாக்டர்கள் செந்தில்நாதன், ராஜாராமன் முன்னிலை வகித்தனர்.அப்போது, அனந்தசெயனன், ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், கணேசன், கல்லுாரி பேராசிரியர்கள் ஜானகிராமன், கலைமுகம் கலந்துகொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE