காசிமேடு: காசிமேடில், வாலிபரிடம் மொபைல் போன், பணம் பறித்துச் சென்ற கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, அம்பத்துார் குப்பம், வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன், 36. இவர், காசிமேடில், நேற்று அதிகாலை மீன் வாங்க வந்தார்.அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த மூவர் கும்பல், கண்ணனின் கையை கத்தியால் குத்தி, அவர் வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, மொபைல் போன் மற்றும் 7,000 ரூபாயை பறித்து சென்றது. இதுகுறித்து, காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE