திருவாடானை : திருவாடானை அருகே பிராந்தன் வயல், பாண்டுகுடி, தொண்டி, புதுபட்டினம், பாசிபட்டினம் உட்பட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 36 பேர் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
தடை உத்தரவை மீறியதால் கருமொழி செக்போஸ்ட்டில் வழிமறித்த போலீசார் அனைவரையும் திருவாடானை அரசு கல்லுாரியில் தனிமைப்படுத்தினர். பரிசோதனையில் கொரோனா அறிகுறி இல்லை, என தெரிய வந்தது.தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முடிவடைந்ததால் நேற்று திருவாடானை தாசில்தார் மாதவன்,வி.ஏ.ஓ. ராஜேஸ் ஆகியோர் 36 பேரையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE